மாநகராட்சி சொத்து வரி ரூ.2,000 கோடி வசூல்
சென்னை மாநகராட்சியில் 2024 - 25ம் நிதியாண்டில், சொத்துவரி வசூலிக்க, 1,900 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், சொத்துவரி செலுத்தாத, 100 பேரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
மேலும், சிறிய அளவிலான சொத்துவரி பாக்கி வைத்திருந்த, 2 லட்சம் பேருக்கும், எளிதில் சொத்துவரி செலுத்தும் வகையில், 'க்யூ.ஆர்., குறியீடு' அடங்கிய 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, சொத்து வரி வசூலிக்கப்பட்டது.
இதுவரை, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 550 கோடி ரூபாய் தொழில் வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்த வரி வசூலில் பெரும்தொகை, 2,231.21 கோடி ரூபாய் வரை மாநகராட்சி பணியாளர்களுக்கு ஊதியம், ஓய்வூதியத்திற்கு செலவிடப்படுகிறது. வரும் நிதியாண்டில், 2,020 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, மாநகராட்சி இலக்கு நிர்ணயித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலையில் 15 முறை கரணமடித்த கார்: தூக்கி வீசப்பட்ட 3 பேர், பகீர் வீடியோ
-
''திமுக கரை வேட்டி கட்டினால் பொட்டு வைக்காதீங்க...'': ஆ.ராசா அடாவடி பேச்சு
-
லோக்சபாவில் வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல்: அனல் பறக்கும் விவாதம்!
-
கிரீமிலேயர் வருமான வரம்பை ரூ.16 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
-
இன்றைய நாடகம் கச்சத்தீவு மீட்புத் தீர்மானம்: ஸ்டாலினை விமர்சித்த அண்ணாமலை!
-
மார்க்சிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடு மதுரையில் துவக்கம்!
Advertisement
Advertisement