நடைபாதையில் பேனர் பாதசாரிகள் அதிருப்தி

அரும்பாக்கம், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்டம் உதவிகள் வழங்கும் விழா, அண்ணா நகரில் இன்று மாலை நடக்க உள்ளது.

இதை முன்னிட்டு, அரும்பாக்கத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 30 அடி துாரம் இடைவெளியில் சாலை முழுதும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, நடைபாதையை ஆக்கிரமித்து பேனர் வைத்துள்ளதால், பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

பேனர், விளம்பர தட்டிகள் வைப்பதால், விபத்து நிகழ்ந்து சாலையில் செல்வோர் உயிரிழக்கும் சம்பவம், பலமுறை நடந்துள்ளது.

இதுகுறித்து நீதிமன்றம் கண்டித்தும், கட்சியினர் கவலைப்படாமல், பேனர், விளம்பர தட்டிகள் வைப்பதை வழக்கமாக்கி வருகின்றனர். அதிகாரிகள் இதை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement