பெண் மீது தாக்குதல் உறவினர்கள் 2 பேர் கைது

சின்னசேலம்: சின்னசேலத்தில் இளம் பெண்ணை தாக்கிய அவரது உறவினர்கள், 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னசேலம் அகதிகள் முகாம் பகுதியை சேர்ந்தவர் சுதாகர் மகள் டால்னியா, 24; இவர் சென்னையில் உள்ள தனியார் நர்சிங் ஹோமில் பணிபுரிகிறார்.

விடுமுறைக்காக கடந்த, 1 ம் தேதி வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில், வீட்டில் இருந்த டால்னியாவை முன்விரோத தகராறு காரணமாக அவரது சித்தப்பாக்கள் அதே பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 40; மற்றும் செந்தில்நாதன், 38; ஆகிய இருவரும் தாக்கினர்.

பலத்த காயம் அடைந்த டால்னியா, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

Advertisement