பனை மரங்களை வெட்டினால் நடவடிக்கை
திருவாடானை: பனை மரங்களை சட்டத்திற்கு புறம்பாக வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாடானை தாசில்தார் ஆண்டி கூறினார். அவர் கூறியதாவது:
திருவாடானை தாலுகாவில் செங்கல் சூளை மற்றும் பல்வேறு தேவைகளுக்காக ரோட்டோரம் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் பனை மரங்களை சிலர் வெட்டுகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தொண்டி அருகே புதுக்குடி ரோட்டோரம் இருந்த 18 பனை மரங்களும், தினையத்துார் கண்மாய்க்குள் இருந்த பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளன.
இது குறித்து தொண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பனை மரங்களை வெட்டுவதற்கு முன்பு கலெக்டரின் அனுமதி பெற வேண்டும். பனை மரங்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே அனுமதி இல்லாமல் பனை மரங்களை வெட்டுபவர்கள் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிரில்லியன் டாலர் பொருளாதாரம் நோக்கி பயணம்; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
-
கர்நாடகாவில் சோகம்: நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 5 பேர் பலி, 11 பேர் காயம்
-
ரயில் நிலையத்தில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்; வாலிபர் கைது
-
அமெரிக்கா பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்படும்: சர்வதேச நிதி ஆய்வு நிறுவனம் கணிப்பு
-
தர்பூசணியா; பிலால் பிரியாணியா: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் இடமாற்றத்திற்கு காரணம் என்ன?
-
கொழும்பு நகரில் பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் உற்சாக வரவேற்பு!
Advertisement
Advertisement