குறைதீர்வு முகாம்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் நடந்த மின் நுகர்வோர் குறைதீர்வு முகாமில், 139 மனுக்கள் பெறப்பட்டன.
விருத்தாசலம் பூதாமூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், மின் நுகர்வோர் குறைதீர்வு சிறப்பு முகாம் நடந்தது. செயற்பொறியாளர் சுகன்யா தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் நாராயணசாமி, பாரதி, புவனேஸ்வரி, இளஞ்செழியன், உதவி கணக்கு அலுவலர் பழனிவேல் உட்பட உதவி பொறியாளர்கள், மின் ஊழியர்கள் பங்கேற்றனர்.
மின் கட்டணம் மற்றும் இதர கட்டணம், பழுதான மின் மீட்டர் மாற்றம், உடைந்த மின்கம்பம் மாற்றம், குறைந்த மின்னழுத்தம் தொடர்பாக 139 புகார் மனுக்கள் பெறப்பட்டன. அதில், மீட்டர், மின் கட்டணம் தொடர்பான 13 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது களஆய்வு செய்து, துரிதமாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகன கடன் வட்டி குறைய வாய்ப்பு
-
மறைந்த குமரி அனந்தனுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பழங்காலத்தை நவீனத்துவத்துடன் இணைப்போம்: பிரதமர் மோடி உறுதி
-
மீண்டும் எகிறிய தங்கம் விலை; சவரனுக்கு ரூ.520 அதிகரிப்பு
-
நதிகள் இணைப்பு, பாரதமாதா கோவிலுக்காக பாதயாத்திரை மேற்கொண்டவர் குமரி அனந்தன்: அண்ணாமலை இரங்கல்
-
சிறுமி மாயம் போலீஸ் விசாரண
Advertisement
Advertisement