'கச்சத்தீவை பிரதமர் மோடி மட்டுமே மீட்க முடியும்' ஜான்பாண்டியன் பேட்டி

ராமேஸ்வரம்: தி.மு.க., தாரைவார்த்த கச்சத்தீவை பிரதமர் மோடியால் மட்டுமே மீட்க முடியும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.
நேற்று இரவு 7: 20 மணிக்கு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜான்பாண்டியன், கட்சி நிர்வாகிகளுடன் தரிசனம் செய்தார். பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாம்பன் கடலில் அமைத்த புதிய ரயில் பாலம் பிரதமர் மோடி ஆட்சியின் வரலாற்று சாதனை.
முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேறாது. இது அறிவிப்புடன் காணாமல் போய்விடும். கச்சத்தீவை தி.மு.க., தாரைவார்த்து கொடுத்து விட்டு சட்டசபையில் மீட்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றுவது கேலிக் கூத்தாக உள்ளது. பிரதமர் மோடியால் மட்டுமே கச்சதீவை மீட்க முடியும். இதனையும் பிரதமர் மோடி செய்து காட்டுவார் என்றார்.
வாசகர் கருத்து (1)
அப்பாவி - ,
08 ஏப்,2025 - 10:13 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பா.ஜ., - தி.மு.க. இரண்டும் இணைந்த கைகள், இரட்டைக்குழல் துப்பாக்கி: விஜய் குற்றச்சாட்டு
-
வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
எந்த உத்தரவாதமும் இன்றி ரூ.33 லட்சம் கோடி கடன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன்; தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
Advertisement
Advertisement