மொபைல்போன் ஏற்றுமதி 54 சதவிகித உயர்வு

புதுடில்லி:கடந்த நிதியாண்டில், நாட்டின் மொபைல் போன் ஏற்றுமதி மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இதில், ஐபோன் மட்டும் 1.50 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதாக, மத்திய அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது:

முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024-25ம் நிதியாண்டில், ஸ்மார்ட் போன் ஏற்றுமதி 54 சதவீதம் அதிகரித்து உள்ளது. இதன் வாயிலாக, இந்தியாவின் முன்னணி ஏற்றுமதி பொருளாக ஸ்மார்ட்போன் மாறி உள்ளது.

கடந்த பத்தாண்டு களில், நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி 5 மடங்கும், ஏற்றுமதி 6 மடங்குக்கு மேலும் வளர்ச்சி கண்டுள்ளது.

இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement