வீடு புகுந்து நகை திருட்டு

விழுப்புரம் : விழுப்புரத்தில் கம்யூட்டர் சர்வீஸ் சென்டர் உரிமையாளர் வீட்டில் நகை மற்றும் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு, ராமையா நகரைச் சேர்ந்தவர் சரவணன், 44; திருச்சி நெடுஞ்சாலையில் கம்யூட்டர் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டை பூட்டி கொண்டு கடைக்கு சென்று மாலை திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 20 ஆயிரம் ரூபாய், அரை கிலோ வெள்ளி பொருட்கள், லேப்டாப் கொள்ளை போனது தெரியவந்தது.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement