பணிக் கொடை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி : விற்பனைக்குழு பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில், பணிக் கொடை மற்றும் பணி ஓய்வு ஊதியத்தை வழங்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தட்டாஞ்சாவடி விற்பனைக்குழு செயலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 4:00 மணியளவில், நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராமன், துணை தலைவர் ரகுநாதன், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விற்பனைக் குழுவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 9 ஆண்டுகள் ஆகியும், 24 ஊழியர்களுக்கு பணிக் கொடை மற்றும் பணி ஓய்வு ஊதியத்தை வட்டியுடன் வழங்காத விற்பனைக்குழுவின் செயலரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
4 மாதங்களில் 85,000 இந்தியர்களுக்கு விசா வழங்கியது சீனா!
-
தங்கம் விலை மீண்டும் உச்சம்: ஒரே நாளில் ரூ.760 உயர்வு, சவரன் ரூ.70,000 ஆயிரத்தை கடந்தது!
-
வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை; ஆயுதங்கள் பறிமுதல்
-
ஆங்கிலேயர் ஆட்சியில் உருவான நீதிமன்றம்
-
கடலுார் மாநகர கவுன்சிலர்கள் அதிருப்தி கூடுதலாகும் எதிரணியினரின் 'பலம்'
Advertisement
Advertisement