புதிய போப்பை தேர்வு செய்ய வாக்களிக்கும் 4 இந்திய கார்டினல்கள்: முழு விவரம்

8

வாடிகன்; புதிய போப்பை தேர்வு செய்யும் நடைமுறையில் 4 இந்திய கார்டினல்கள் வாக்களிக்க உள்ளனர்.


@1brகத்தோலிக்க கிறிஸ்துவ மத தலைவரான போப் பிரான்சிஸ் (88) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தலைவர்கள், மத தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.


போப் பிரான்சிஸ் மறைவைத் தொடர்ந்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகள் தொடங்க உள்ளன. புதிய போப் தேர்வில் 80 வயதுக்கு குறைவான கார்டினல்கள் வாடிகனில் கூடி ஓட்டு போடுவர்.


ஓட்டளிக்கும் தகுதியான கார்டினல்கள் எண்ணிக்கை இதுவரை 120 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது 136 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் இந்தியாவின் 4 கார்டினல்களும் இடம்பெறுகின்றனர்.


அவர்களின் விவரம் வருமாறு;


பிலிப் நேரி பெராவ்; 72 வயதான இவர் கோவா, டாமன் பேராயர். இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, ஆசிய ஆயர்கள் மாநாடுகளின் கூட்டமைப்பு தலைவராக உள்ளார். புலம்பெயர்ந்து வந்தோரை ஆதரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் நீண்ட கால பங்களிப்பை அளித்து வருகிறார்.


பசேலியாஸ் கிளிமீஸ்; இவரது இயற்பெயர் ஐசக் தொட்டும்கல், வயது 64. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை ஸ்தலமாக கொண்ட சைரோ மலங்கரா கத்தோலிக்க திருச்சபை பேராயர். இந்த திருச்சபையின் ஆயராக பல ஆண்டுகளாக நீடித்து வருகிறார். 2001ம் ஆண்டு பிஷப்பான அவர், 2012ல் கார்டினாலானார்.


ஆண்டணி போலா; ஹைதராபாத் பேராயரான இவரின் வயது 63. இந்தியாவில் இருந்து வந்த முதல் தலித் கார்டினல் என்ற வரலாற்றை படைத்தவர். அவரது நியமனம் திருச்சபையில் ஒரு சமத்துவத்தை உணர்த்துவதாக கருதப்படுகிறது.


ஜார்ஜ் ஜேக்கப் கூவக்காடு; இந்தியாவின் 4 கார்டினல்களில் இவர் தான் மிகவும் இளையவர். இவரின் வயது 51. உலகம் முழுவதும் பல்வேறு மதங்கள் இடையே புரிதலை ஏற்படுத்த வேண்டும் என்பதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். திருச்சபையில் ஒரு புதிய தலைமையை பிரதிநிதிப்படுத்துகிறார் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

Advertisement