தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம்: ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

புதுடில்லி: தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் என்று ராகுலின் வாக்கு சதவீதம் குறித்த கருத்துக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்றுள்ள லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், மஹாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் பற்றி குறை கூறும் வகையில் பேசினார்.
"தேர்தல் ஆணையம் மாலை 5:30 மணிக்கு வாக்களித்தோர் எண்ணிக்கையை எங்களுக்கு வழங்கியது, மாலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை, 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்தனர். இது உடல் ரீதியாக சாத்தியமற்றது. ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் மூன்று நிமிடங்கள் ஆகும், நீங்கள் கணக்கிட்டால், அதிகாலை 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் இருந்தனர், ஆனால் இது நடக்கவில்லை" என்று அவர் கூறியிருந்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த தலைமை தேர்தல் ஆணையம் கூறியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சு கண்டனத்திற்குரியது. தவறான தகவல்களை பரப்புவது சட்டத்தை அவமதிப்பதற்கு சமம் ஆகும்.
அரசியல் கட்சி தொண்டர்கள் மற்றும் வாக்குச்சாவடி பணியாளர்களின் முயற்சிகளைப் புண்படுத்துவதாகும்.
இதுபோன்ற கூற்றுக்கள் அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பிரதிநிதிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக உள்ளது. தேர்தல்களின் போது சோர்வில்லாமல் மற்றும் வெளிப்படையாகப் பணியாற்றும் லட்சக்கணக்கான தேர்தல் ஊழியர்களை கொச்சைப்படுத்த கூடாது.
தேர்தல் ஆணையம் சமரசம் செய்யப்பட்டதாகக் கூறி அதை அவதூறு செய்ய முயற்சிப்பது முற்றிலும் அபத்தமானது.
இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.






மேலும்
-
காஷ்மீரில் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை
-
தாக்குதல் நடத்தியது எந்த அமைப்பு?
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; உயிர் பிழைத்தவர்கள் கண்ணீர் பேட்டி
-
எதிரியின் முகம் மாறியுள்ளது: எண்ணம் மாறவில்லை: முதல்வர் ஸ்டாலின்
-
பா.ஜ. அலுவலகங்களுக்கு பாதுகாப்பு உறுதி: முதல்வருக்கு தமிழக பா.ஜ., தலைவர் வலியுறுத்தல்
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: தலைவர்கள் கண்டனம்