சந்தன மரத்தை வெட்டி கடத்திய இருவர் கைது

அவிநாசி : சந்தனை மரத்தை வெட்டி கடத்தல் தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவிநாசி, சேவூர் ரோடு, நாயக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது வீட்டு தோட்டத்தில், சந்தன மரம் வளர்ந்திருந்தது.
கடந்த, 18ம் தேதி, இரவு சந்தன மரத்தை அடியோடு மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர். இதுகுறித்து அவிநாசி போலீசில், தியாகராஜன் புகார் அளித்தார்.
அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். அதில், ஈரோடு மாவட்டம், தாளவாடி - சூசையாபுரம் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் லுாயிஸ், 30, சகாயராஜ், 38, ஆகிய இருவரும் மரத்தை வெட்டி கடத்தி, சத்தியமங்கலம் - தாச கவுண்டம்புதுார், நரசபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு விற்று உள்ளனர்.
இதனால், மூன்று பேரையும் அவிநாசி போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், கிளைச்சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசுடன் அதிகார மோதல் இல்லை; கவர்னர் மாளிகை தகவல்
-
பிரதமர் மோடியின் உ.பி., பயணமும் ரத்து
-
காஷ்மீர் தாக்குதலில் நூலிழையில் தப்பிய கேரளா ஐகோர்ட் நீதிபதிகள்!
-
முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் முக்கிய ஆலோசனை
-
காஷ்மீரில் பதுங்கி உள்ள 56 வெளிநாட்டு பயங்கரவாதிகள்: லஷ்கர் அமைப்பினர் அதிகம்
-
பஹல்காமில் பயங்கரவாதியை எதிர்த்து போராடிய குதிரை ஓட்டி வீரமரணம்
Advertisement
Advertisement