எருக்கம் இலை உரம் தயாரிப்பு பயிற்சி

பேரையூர் : மதுரை வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவிகள் 2 மாதங்களாக பேரையூர் பகுதியில் பயிற்சி பெற்று வருகின்றனர். பி.சுப்புலாபுரத்தில் விவசாயிகளுக்கு மாணவி கார்த்திகா எருக்கம் இலை மூலம் உரங்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தார். ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் பற்றி விளக்கினார். மாணவி காவியா ஸ்ரீ, கத்தரி விவசாயிகளுக்கு மினி சோலார் லைட் ட்ராப் என்ற கருவியின் பயன்பாடு குறித்து விளக்கினார். இது கரிம வேளாண்மையில் பூச்சி மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ள கருவி என்றார்.

Advertisement