தி.மு.க.,வினருக்கும் அதே கதி; கொலை வழக்கில் போராட்டம்

சிவகங்கை: சிவகங்கை அருகே சாமியார்பட்டியைச் சேர்ந்த பிரவீன் குமார், 27; தி.மு.க., விளையாட்டு அணி துணை அமைப்பாளராக இருந்தார். இவர், நேற்று முன்தினம் வெட்டி கொல்லப்பட்டார்.

இக்கொலையில், அவரது உறவினரான கருணாகரன், 20, அவரது நண்பர்கள் பிரபாகரன், 19, குரு, 21, ஆகியோர் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது.

பெரியகோட்டை அருகே மாங்குடியில் பதுங்கியிருந்த அவர்களை போலீசார் விரட்டி பிடித்ததில், மூவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று காலை 10:00 மணிக்கு பிரவீன் குமாரின் உறவினர்கள், கொலையில் தொடர்புடைய மேலும் சிலர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி, மானாமதுரை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை, சாமியார்பட்டி விலக்கில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கூடுதல் எஸ்.பி., பிரான்சிஸ், டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ் பேச்சு நடத்தினர். பின், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Advertisement