கிருஷ்ணர் நாமத்தை தொடர்ந்து கூறினால் மனபாரம் குறையும்

அன்னுார்; அன்னுார் கரிவரதராஜ பெருமாள் கோவில், வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு 'இஸ்கான்' அமைப்பு சார்பில் பகவத் கீதை சொற்பொழிவு நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சரவணன் வரவேற்றார்.
இஸ்கான் தலைமையகத்தின் ஆசிரியர் சங்கர் சன கவுர தாஸ் பிரபு பேசுகையில், ''கர்மயோகத்தை விட உயர்ந்தது ஞான யோகம். ஞான யோகத்தை விட உயர்ந்தது பக்தி யோகம். பக்தியோகத்தால் மட்டுமே இறைவனை அடைய முடியும். யோகா என்றால் இணைத்தல் என்று பொருள். உடலையும், மனதையும், இறைவனுடன் இணைப்பதே யோகா. வெறும் ஆசனம் செய்வது மட்டும் யோகா அல்ல.
எந்த நேரமும் ஹரே கிருஷ்ணா நாமத்தை கூறலாம். தொடர்ந்து கிருஷ்ணர் நாமத்தை கூறுவதால், மனபாரம் குறையும். மனம் லேசாகும். பக்குவமடையும்,'' என்றார். இதையடுத்து பகவத் கீதை பஜனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜம்மு காஷ்மீரில் ஜெயில் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி; பாதுகாப்பு அதிகரிப்பு
-
வாரத் துவக்கத்தில் தங்கம் விலை சற்று உயர்வு; ஒரு சவரன் ரூ.70,200!
-
வெறிநாய் கடித்து சிறுமி உயிரிழப்பு; தடுப்பூசி போட்டும் பயனில்லை; ஒரே மாதத்தில் 3வது சம்பவம்
-
தே.ஜ., கூட்டணியிலேயே நீடிப்பேன்; மீண்டும் மீண்டும் சொல்கிறார் நிதீஷ் குமார்
-
அக்னி நட்சத்திரம் முதல் நாளில் அதிக மழைப்பொழிவு எங்கே?
-
கோவில் திருவிழாவில் நடனமாடுவதில் தகராறு; கத்தியால் குத்தி சிறுவன் கொலை
Advertisement
Advertisement