நாங்குநேரி கார் விபத்து 7 வயது சிறுமியும் பலி
நாகர்கோவில்:நாங்குநேரி அருகே நடைபெற்ற கார் விபத்தில் ஆறு பேர் இறந்த நிலையில், படுகாயம் அடைந்து, 10 நாட்களாக சிகிச்சையில் இருந்த 7 வயது சிறுமியும், உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ், 68. திருநெல்வேலி டக்கரம்மாள்புரத்தில் வசித்து வந்தார். ஏப்., 27ல் தனிஸ்லாஸ், அவரது மனைவி மார்கரட் மேரி, 57, மகன் ஜோபர்ட், 37, மருமகள் அமுதா, 32, பேரக்குழந்தைகள் ஜோஹனா, 9, ஜோபினா, 7, ஒன்றரை வயதான ஜோகன் ஆகியோருடன், மைலோடு வந்து விட்டு திருநெல்வேலி சென்றார்.
நாங்குநேரி அருகே இவர்களது கார் விபத்தில் சிக்கியது. இதில், ஜோபினா தவிர, ஆறு பேரும் இறந்தனர். ஜோபினா, சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். இதைத் தொடர்ந்து, இந்த விபத்தில் பலி எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இந்த காருடன் மோதிய, எதிரே வந்த மற்றொரு காரில் இருந்தவரும் இறந்து விட்டார். அவரையும் சேர்த்தால், விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை எட்டாக உயர்ந்துள்ளது.
மேலும்
-
ஜெய்சால்மரில் அமலானது லாக்டவுன்: ரயில் சேவைகள் உடனடி ரத்து
-
பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு
-
சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் இதுதான்: கமிஷனர் அருண்
-
தேசிய பாதுகாப்பு நிதிக்கு ஒரு மாத சம்பளம்: இளையராஜா
-
போர் குறித்து தவறான சமூக வலைதள பதிவுகள் நீக்கம்; தண்டனைக்குரிய குற்றம் என எச்சரிக்கை
-
சந்தைகள், பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்: ராஜஸ்தான் மக்களுக்கு அறிவிப்பு