துளசி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா

புதுச்சேரி : புதுச்சேரி துளசி மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா நேற்று நடந்தது.

புதுச்சேரி ரயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பாலசுப்பிரமணிய கோவிலில் உள்ள துளசி மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது.

இதையொட்டி, காலை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் ஆராதனைகள் நடந்தது.

இரவு 8 மணிக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement