பயங்கரவாதிகள் 3 பேர் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு

3


ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் அளித்தால், ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.


கடந்த ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 2019 ம் ஆண்டு புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகக் கொடூரமான தாக்குதல் சம்பவமாகும். இந்த தாக்குதலில் தொடர்புடைய பயங்கரவாதிகள் 3 பேர் குறித்து தகவல் அளித்தால், ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர்.

தெற்கு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளின் புகைப்படங்களுடன் போலீசார் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் காஷ்மீர் ஒன்றுபட்டுள்ளதாகவும் சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும், இந்த பயங்கரவாதிகள் மூன்று பேரின் ஓவியங்களை என்.ஐ.ஏ., வெளியிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள். ஆசிப், சுலேமான் ஷா மற்றும் அபு தல்ஹா என்று பெயர்களை அதிகாரிகள் வெளியிட்டு உள்ளனர்.

Advertisement