நீங்கள் தான் வெட்கி தலைகுனிய வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில், அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில், நீங்கள் நீங்கள் தான் வெட்கி தலை குனிய வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., பதிலளித்து உள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு வாழ்நாள் முழுதும் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! என எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்து அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்., வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள் முதல்வர் ஸ்டாலின்!
யார் வெட்கித் தலை குனிய வேண்டும்?
*அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் வீட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்ட உங்கள் அமைச்சர் மீதும், சென்னை துணை மேயர் மீதும் விசாரணை நடத்த துப்பில்லாத நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
*#யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லாமல், அந்த SIR ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
* அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றம் வரை சென்று, மூத்த வக்கீல்களை நியமிக்க ,மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவழித்து, 10 வயது சிறுமிக்கும், அச்சிறுமியின் பெற்றோருக்கும் கிடைக்க வேண்டிய நீதிக்கு எதிராக வாதாடிய நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்!
நீட் ரகசியம் என்று நீங்களும், உங்கள் மகனும் மாணவர்களை ஏமாற்றிய போதே, உங்களுக்கு வெட்கம், மானமெல்லாம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. இருப்பினும், கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால், உங்கள் ஆட்சியில் பெண்கள் வெளியிலேயே வர முடியாத அவல நிலை இருப்பதையும், நாள்தோறும் பதியப்படும் போக்சோ வழக்குகளையும் பார்த்து கொஞ்சமாவது வெட்கித் தலைகுனியுங்கள்! இவ்வாறு அந்த பதிவில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (24)
Haja Kuthubdeen - ,
13 மே,2025 - 22:02 Report Abuse

0
0
Reply
sridhar - Chennai,இந்தியா
13 மே,2025 - 21:37 Report Abuse

0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
13 மே,2025 - 19:38 Report Abuse

0
0
Reply
Dwarakanath Putti - Bangalore,இந்தியா
13 மே,2025 - 19:18 Report Abuse

0
0
Reply
Kadaparai Mani - chennai,இந்தியா
13 மே,2025 - 19:18 Report Abuse

0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
13 மே,2025 - 19:06 Report Abuse

0
0
Reply
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
13 மே,2025 - 19:01 Report Abuse

0
0
Reply
K.Ramakrishnan - chennai,இந்தியா
13 மே,2025 - 18:50 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
13 மே,2025 - 20:02Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
13 மே,2025 - 18:47 Report Abuse

0
0
Reply
GMM - KA,இந்தியா
13 மே,2025 - 18:28 Report Abuse

0
0
Reply
மேலும் 13 கருத்துக்கள்...
மேலும்
-
இந்தியா தாக்குதலில் சேதமடைந்த பாக்., விமானப்படை தளங்கள்: புதிய படங்கள் வெளியானது
-
ஏர்டெல் சேவை பாதிப்பு: பயனர்கள் அவதி
-
பாக்., தூதரக அதிகாரி நாட்டை விட்டு வெளியேற மத்திய அரசு 24 மணி நேரம் கெடு
-
முதுமலை யானைகள் முகாமில் விழா; ரூ.13 கோடி திட்டங்களை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்!
-
தூய்மைப் பணியாளர்களுக்கான திட்டத்தில் முறைகேடு: சி.பி.ஐ., விசாரணை கோரி சவுக்கு சங்கர் வழக்கு
-
பாகிஸ்தானை ஆதரித்த துருக்கி, அஜர்பைஜானை புறக்கணிக்க வேண்டும்; இணையத்தில் டிரெண்டிங்
Advertisement
Advertisement