ப.வேலுார் டவுன் பஞ்., கூட்டம் 28 தீர்மானம் நிறைவேற்றம்

ப.வேலுார் ;நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்.,ல், 18 வார்டுகள் உள்ளன. தி.மு.க., கவுன்சிலர் லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும், செயல் அலுவலராக மூவேந்திர பாண்டியனும் உள்ளனர். கவுன்சிலர்கள் இடையே கருத்து வேறுபாடால், கடந்த, இரண்டு மாதமாக மன்ற கூட்டம் நடக்காமல் இருந்தது. இந்நிலையில், அதிருப்தி கவுன்சிலர்களிடம், செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால், கவுன்சிலர்களிடையே உள்ள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று மன்ற கூட்டம் நடந்தது.

இதில் தலைவர் லட்சுமி, துணைத்தலைவர் ராஜா உள்பட, 18 கவுன்சிலர்கள், செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி, கவுன்சிலர்கள் கேட்ட பணிகளை உடனடியாக செய்து தரப்படும் என, செயல் அலுவலர் மூவேந்திர பாண்டியன் அறிவித்தார்.

Advertisement