கொலை மிரட்டல்: மூவர் மீது வழக்கு
போடி: போடி அருகே விசுவாசபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யம்மாள் 45. இவரது மகன் ஜெகதீசன். ராணுவ வீரர். விசுவாசபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவிற்கு ஜெகதீசன் வந்துள்ளார்.
அப்போது அம்மாபட்டியை சேர்ந்த குணா என்பவர் மது போதையில் பிரச்னை செய்துள்ளார். அய்யம்மாளின் 2 வது மகன் சரவணன் கண்டித்துள்ளார்.
ஆத்திரம் அடைந்த குணா. சரவணனை அடித்துள்ளார். விலக்கி விட வந்த ராணுவ வீரர் ஜெகதீசனை குணா, இவரது தந்தை ராஜபாண்டியன், தாயார் பரமேஸ்வரி மூவரும் சேர்ந்து தகாத வார்த்தையால் பேசி, கம்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அய்யம்மாள் புகாரில் போடி தாலுகா போலீசார் குணா, ராஜபாண்டியன், பரமேஸ்வரி மூவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போர் நிறுத்தம் வருமா? துருக்கியில் இன்று உக்ரைன்- ரஷ்யா நேரடி பேச்சுவார்த்தை!
-
ராணிப்பேட்டையில் பயங்கர சம்பவம்; ஒரே இரவில் 2 பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக் கொலை
-
ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதிகளை வேட்டையாடும் ராணுவம்
-
சிப்காட்டில் பாய்லர் வெடித்து விபத்து; ரசாயன நீரால் மக்கள் அவதி!
-
மெக்சிகோவில் பஸ் - டிரக் மோதிய விபத்தில் 21 பேர் பலி
-
இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; காரணம் இதுதான்!
Advertisement
Advertisement