பத்தாம் வகுப்பு தேர்வில் கல்வி மாவட்டம்... 95.51% தேர்ச்சி! கடந்தாண்டை விட, 3.51 சதவீதம் அதிகரிப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 95.51 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்தாண்டை விட, மூன்று சதவீதம் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், நேற்று காலை வெளியிடப்பட்டன.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள, 72 அரசுப்பள்ளிகளில், 1,992 மாணவர்கள், 2,141 மாணவியர் என, மொத்தம், 4,133 பேர் தேர்வு எழுதினர். அதில், 1,813 மாணவர்கள், 2,041 மாணவியர் என மொத்தம், 3,854 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 91 சதவீதமும், மாணவியர், 95 சதவீதம் என மொத்தம், 93.25 சதவீதம் அரசுப்பள்ளி தேர்ச்சி பெற்றுள்ளன.
உதவி பெறும் பள்ளிகள்
கல்வி மாவட்டத்தில் மொத்தம், 10 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. அதில், 373 மாணவர்கள், 614 மாணவியர் என மொத்தம், 987 பேர் தேர்வெழுதினர். அதில், மாணவர்கள், 335, மாணவியர், 607 பேர் என, மொத்தம், 942 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 89; மாணவியர், 98 சதவீதம் என மொத்தம், 95.44 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவுத்தம்பதி, அரசு பழங்குடியின மக்களின் இருப்பிட உயர்நிலைப்பள்ளியில், 5 மாணவர்கள், 10 மாணவியர் என, மொத்தம், 15 பேர் தேர்வெழுதி, அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.
தொண்டாமுத்துார் ஆதிதிராவிட நலப்பள்ளியில், 8 மாணவர்கள், 14 மாணவியர் என மொத்தம், 22 பேர் தேர்வெழுதினர். அதில், மாணவர்கள் 100 சதவீதமும், மாணவியர், 13 பேரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியானது, 97.3 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
நகராட்சி பள்ளிகள்
பொள்ளாச்சி நகராட்சியில், மூன்று பள்ளிகளில், மாணவர்கள், 147, மாணவியர், 112 பேர் தேர்வெழுதினர். அதில், 125 மாணவர்கள், 101 மாணவியர் என, 226 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 85 சதவீதமும், மாணவியர், 90 சதவீதம் என மொத்தம், 87.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மெட்ரிக் பள்ளிகள்
62 மெட்ரிக் பள்ளிகள் உள்ளன. அதில், 1,781 மாணவர்கள், 1,552 மாணவியர், என, மொத்தம், 3,333 பேர் தேர்வெழுதினர். அதில், 1,754 மாணவர்கள், 1,544 மாணவியர் என, மொத்தம், 3,298 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள், 98 சதவீதம், மாணவியர், 99 என, மொத்தம், 98 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கல்வி மாவட்டம்
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத மாணவர்கள், 4,306, மாணவியர், 4,443 என மொத்தம், 8,749 பேர் விண்ணப்பித்தனர். அதில், மாணவர்கள், 4,040, மாணவியர், 4,316 என மொத்தம், 8,356 பேர் தேர்வெழுதினர். மாணவர்கள், 266, மாணவியர், 127 என மொத்தம், 353 பேர் தேர்ச்சி பெறவில்லை.
அதில், மாணவர்கள், 93.82 சதவீதம், மாணவியர், 97.14 சதவீதம் என மொத்தம், 95.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கல்வி மாவட்டமானது கடந்தாண்டு, 92 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது. தற்போது, 3.51 சதவீதம் அதிகரித்து, தேர்ச்சியானது, 95.51 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மாணவியர் அபாரம்
பத்தாம் வகுப்பு தேர்வில், வழக்கம் போல மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி சதவீதமே அதிகரித்துள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், 95.51 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளோம். பின் தங்கிய மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகள், நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட்டது,' என்றனர்.
மேலும்
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு
-
அதிகாலை பயணத்தில் விபத்து; கட்டுப்பாடு இழந்த ஆம்னி பஸ் மோதி நால்வர் பலி
-
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு
-
உக்ரைனுக்கான ராணுவ உதவிகளை அதிகரிக்கணும்: உக்ரைன் அதிபர் வலியுறுத்தல்
-
புலிக்குட்டியை தொட்டுப் பார்த்தவர் மீது பாய்ந்தது வழக்கு!