தேயிலை ஏலத்தில் ஏற்றம்: மொத்த வருவாய் அதிகரிப்பு
குன்னுார் : தென் மாநிலங்களில் உள்ள ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 42.32 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த, 19வது ஏலத்தில், '18.44 லட்சம் கிலோ இலை ரகம்; 5.03 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 23.47 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
'12.63 லட்சம் கிலோ இலை ரகம்; 4.04 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 16.67 லட்சம் கிலோ விற்பனையானது. கடந்த ஏலத்தை விட, 1.97 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது.
விற்பனையில், 37 ஆயிரத்து 700 கிலோ அதிகரித்தது. 71 சதவீதம் விற்று, 29 சதவீதம் தேக்கமானது.
சராசரி விலை கிலோவிற்கு, 114.78 ரூபாய் என இருந்தது; சராசரி விலையில், 2 ரூபாய் வரை சரிந்தது. மொத்த வருமானம், 19.13 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த வாரத்தை விட, விற்பனையில், சிறிய ஏற்றம் காணப்பட்டதால், 13 லட்சம் ரூபாய் வருவாய் அதிகரித்தது.
டீசர்வ் ஏலம்
நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்படும் நிலையில், 19வது ஏலத்திற்கு, 1.97 லட்சம் கிலோ வந்ததில், 1.21 லட்சம் கிலோ விற்பனையானது. வரத்து அதிகரித்த போதும், விற்பனையில் வீழ்ச்சி கண்டது. சராசரி விலை கிலோவிற்கு, 103.89 ரூபாய் என இருந்தது.
கிலோவிற்கு, 3 ரூபாய் சரிந்தது. 1.25 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 11 லட்சம் ரூபாய் குறைந்தது.
' கோவை ஏல மையத்தில் நடந்த ஏலத்தில், 5.59 லட்சம் கிலோ வந்ததில், 3.80 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை, 134.89 ரூபாய் என இருந்தது. 5.13 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, 52 லட்சம் ரூபாய் குறைவானது.
கொச்சி ஏல மையத்தில், 13.26 லட்சம் கிலோ வந்ததில், 10.50 லட்சம் கிலோ விற்பனையானது. சராசரி விலை, 166.05 ரூபாய் என இருந்தது.
சராசரி விலையில் மாற்றமில்லை. 16.81 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட 3.47 கோடி ரூபாய் கூடுதலானது.
தென் மாநிலங்களில், 4 ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 42.32 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, இந்த ஏலத்தில், 4 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக இருந்தது. இரு வாரங்களை ஒப்பிடுகையில், 18.87 கோடி ரூபாய் மொத்த வருவாய் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு