முதல் முறையாக 100 சதவீதம் தேர்ச்சி; அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

பந்தலுார் : பந்தலுார் சேரம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொது தேர்வு, 46 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.

கடந்த, 39 ஆண்டுகளாக, 10ம் வகுப்பு தேர்வு எழுதி வரும் நிலையில், நேற்றைய தேர்வு முடிவில் முதல் முறையாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர். இதை தொடர்ந்து, பள்ளி தலைமை ஆசிரியர் பொன்முத்து நம்பிராஜன் தலைமையிலான ஆசிரியர் குழுவினருக்கு, பள்ளி பி.டி.ஏ., தலைவர் காட்டுராஜா, துணைத் தலைவர் மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் குளோரி ஷீலா தலைமையிலான குழுவினர் பாராட்டு தெரிவித்தனர்.

பந்தலுார் அருகே குந்தலாடி அரசு உயர்நிலை பள்ளியில், 24 மாணவ, மாணவிகள், 10 வகுப்பு பொது தேர்வு எழுதினர். அதில், அனைவரும் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் பஜீத்குமார் தலைமையிலான ஆசிரியர்களுக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement