ரயிலில் முன்பதிவு பெட்டியில் இதர பயணியரை தடுக்க ஆர்.பி.எப்., சிறப்பு குழு

சென்னை : ரயிலில் முன்பதிவு பெட்டிகளில், இதர பயணியர் பயணம் செய்வதை தடுக்க, சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு உள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:
கோடை விடுமுறையில் வழக்கத்தை விட, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால், கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.
முன்பதிவு செய்யாத பயணியர், திடீரென முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணிக்கின்றனர். இதனால், முன்பதிவு செய்த பயணியருக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இதைத்தடுக்க, விரைவு ரயில்களில், டிக்கெட் பரிசோதகர்கள் குழுவினர், திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை - கோவை, திருச்சி, மதுரை வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை குழுவினரும் சோதனை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் மூன்று பேர் இருப்பர். முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமிக்கும் மற்ற பயணியரை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படுகிறது.
உரிய டிக்கெட் இல்லாதவர்கள் கீழே இறக்கி விடப்பட்டு, முன்பதிவு இல்லாத பெட்டிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர். டிக்கெட் இல்லாமல் வருவோருக்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும்
-
4 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ரவி ஒப்புதல்
-
அந்த மனசு தான் சார் கடவுள்; காஷ்மீரில் வீடு வீடாகச் சென்று உதவி செய்யும் ராணுவத்தினர்!
-
சரக்கு லாரி மோதி 10 மாடுகள் பலி; அதிர்ச்சியில் 100 மாடுகள் தப்பி ஓட்டம்!
-
ஒடிசாவை புரட்டி போடும் கனமழை; இடி, மின்னல் தாக்கியதில் 10 பேர் பலி
-
கனிம வளத்துறையில் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம்; அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்; காத்திருப்போர் பட்டியலில் கனிமவள உதவி இயக்குனர்!
-
பாகிஸ்தானை தோலுரிக்கும் எம்.பிக்கள் குழு; சசிதரூர், கனிமொழி, ஓவைசிக்கு வாய்ப்பு