ரூ.15 ஆயிரம் லஞ்சம்; கையும் களவுமாக சிக்கினார் வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன்!

திருவாரூர்: திருவாரூரில் இடத்திற்கான பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், 29, என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்டம் தெற்கு செட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகணேஷ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தின் அளவு, உண்மையில் இருப்பதை காட்டிலும் பட்டாவில் குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுக்குமாறு, முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன் இடம் மனு அளித்துள்ளார்.
அதன் பேரில், நிலத்தை அளவீடு செய்ய முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், 29, ரூ. 15 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இது குறித்து செல்வகணேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் அறிவுறுத்தலின் பேரில், ஜான் டைசனுக்கு ரசாயனம் தடவிய பணத்தை, செல்வகணேஷ் கொடுத்தார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.15,000 லஞ்சம் பெற்ற ஜான் டைசனை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர்.







மேலும்
-
ஆபரேஷன் சிந்தூர்: பின்லேடன் கொல்லப்பட்ட சம்பவத்துடன் ஒப்பிட்ட துணை ஜனாதிபதி
-
பாக்.,கில் 100 கி.மீ துாரம் நுழைந்து பதிலடி: அமித் ஷா பெருமிதம்
-
தமிழகத்திற்கான நிதி நிறுத்தம்- மத்திய அரசுக்கு எதிராக வழக்கு: முதல்வர் ஸ்டாலின்
-
பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்கள் வீழ்த்திய இந்தியா: வெளியான புதுத் தகவல்
-
சென்னை சாலையில் திடீர் பள்ளம்; கார் கவிழ்ந்து விபத்து
-
தொழிலதிபர் வழக்கை தீர்க்க ரூ.2 கோடி லஞ்சம்: அமலாக்கத்துறை அதிகாரி மீது வழக்கு