பைக் மோதி படுகாயம் அடைந்த மூதாட்டி பலி



தாரமங்கலம், தாரமங்கலம் அருகே பாப்பம்பாடியை சேர்ந்தவர் ஜெயமணி, 70. இவர் கடந்த, 3ல் அதே பகுதியில் உள்ள மகன் ராஜா வீட்டுக்கு சென்று விட்டு இரவு, 9:45 மணிக்கு வீட்டுக்கு சாலை ஓரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவரது பின்னால், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக் மோதியது. இதில் தலையில் பலத்த அடிபட்டதால், ஜெயமணியை மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று இறந்தார். ராஜா புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement