கால்வாய் கரையில் கனரக வாகனங்கள்: விவசாயிகள் அதிருப்தி
உடுமலை : உடுமலை நகரை ஒட்டி, பி.ஏ.பி., கால்வாய் செல்கிறது. இதில், அரசு கலைக்கல்லுாரி அருகில் இருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு, கால்வாய் கரையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், ரோடு அமைக்கப்பட்டது.
இந்த ரோடு, புறநகர் பகுதியைச்சேர்ந்த வாகனங்கள், நகருக்குள் செல்லாமல் இருக்க பயன்பட்டது. கொழுமம் ரோடு, பழநி ரோடு, எலையமுத்துார் ரோடு என முக்கிய ரோடுகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டதால், சிறிய பை-பாஸ் ரோடு போல வாகன ஓட்டுநர்கள் பயன்படுத்தி வந்தனர்.
கால்வாய் கரையில் அமைக்கப்பட்ட ரோட்டில், கனரக வாகனங்கள் சென்றால், கரைகள் பாதிக்கப்படும் அபாயம் இருந்தது. எனவே, கனரக மற்றும் அதிக லோடு ஏற்றி வரும் வாகனங்கள் அவ்வழியாக செல்வதை தடுக்க, ஜீவா நகர் சந்திப்பு உட்பட இடங்களில், தடுப்புகள் வைக்கப்பட்டன.
குறிப்பிட்ட உயரத்துக்கு மேல், வாகனங்கள் செல்வதை தடுக்க இந்த இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த தடுப்பு தற்போது இல்லை.
இதனால், அனைத்து வாகனங்களும் அவ்வழியாக சென்று ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கும் பி.ஏ.பி., கால்வாய் கரையை மீண்டும் சேதப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து, மீண்டும் தடுப்புகள் அமைக்க அப்பகுதி மக்களும், விவசாயிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும்
-
ராட்சத குழாய் உடைப்பால் 20 அடி உயரம் பீய்ச்சி அடித்த குடிநீர்; போக்குவரத்து முடக்கம்
-
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாக்., பொருளாதாரம் மீதும் தாக்குதல்; உலக வங்கியை அணுக இந்தியா முடிவு
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றமா; தொடக்கக் கல்வி இயக்ககம் புதிய அறிவிப்பு
-
மஹா.,- சத்தீஸ்கர் எல்லையில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 4 பேர் சுட்டுக் கொலை; பாதுகாப்பு படை அதிரடி
-
மாரடைப்பில் சரிந்த பஸ் ஓட்டுநர்; சமயோசிதமாக செயல்பட்டு 50 பயணிகளை காப்பாற்றிய கண்டக்டர்
-
யாரிடமும் ஓட்டு கேட்க மாட்டேன்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்