பள்ளியில் பிடிபட்ட பாம்பு

நத்தம்: -நத்தம் அருகே உலுப்பகுடியில் அரசு உயர்நிலைபள்ளி தண்ணீர் தொட்டியில் ஊர்ந்து கொண்டிருந்த பாம்பை பார்த்த மாணவர்கள் நத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய உதவி அலுவலர் அம்சராஜன் உள்ளிட்ட வீரர்கள் 3 அடி நீளமுள்ள நல்லபாம்பை பிடித்தனர். பாம்பு நத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

Advertisement