ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதங்களில் 116 பேர் கைது
தர்மபுரி: தமிழக, குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ரூபேஸ்குமார் மீனா, தர்மபுரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை பிரிவில் நேற்று முன்தினம், ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, அவர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில், குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை, கோவை மண்டல எஸ்.பி., பாலாஜி சரவணன், சேலம் சரக காவல் துறை கண்காணிப்பாளர் வடிவேல், இன்ஸ்பெக்டர் திலகா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கடந்த, 5 மாதங்களில், தர்மபுரி மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை மூலம், ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது, 110 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், 50.89 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்-திய, 22 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்திய வழக்கில், 116 பேர் கைது செய்யப்பட்டதுடன், இதில், 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டது.
மேலும்
-
நீர் வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?