சட்டசபை இடைத்தேர்தல் தேதி அறிவித்தது ஆணையம்

புதுடில்லி : நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் காடி, விசாவதர்; கேரள மாநிலம் நிலம்பூர்; பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு; மே.வங்கத்தில் கலிகஞ்ச் ஆகிய ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த தொகுதிகளுக்கு ஜூன் 19ல் ஓட்டுப்பதிவு நடக்கும். இத்தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. வேட்பு மனு தாக்கல் இன்று (மே 26ல்) துவங்குகிறது. மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 2. மனு மீதான பரிசீலனை ஜூன் 3ல் நடக்கிறது.
மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் ஜூன் 5. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 23ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீர் வரத்து அதிகரிப்பு: பாபநாசம் அணை நீர் மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்வு
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
Advertisement
Advertisement