லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

ராயக்கோட்டை, ராயக்கோட்டை அருகே, ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கவிமணி, 19. நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு, பாலக்கோடு - ராயக்கோட்டை சாலையில், கே.டி.எம்., டியூக் பைக்கில் சென்றார்.

புருசப்பன் கோவில் அருகே சென்ற போது, அப்பகுதியில் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியது. இதில் படுகாயமடைந்த கவிமணி, சம்பவ இடத்திலேயே பலியானார். ராயக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement