போலீசார் மெத்தனத்தால் கழிப்பறை இடிப்பு ஸ்டேஷன் முன் தீக்குளிக்க முயன்ற தம்பதி புகார்
இடைப்பாடி, இடைப்பாடி, குஞ்சம்பாளையத்தை சேர்ந்தவர் அய்யனார், 45. இவரது குடும்பத்தினருக்கும், பங்காளிகள் குடும்பத்தினருக்கும் நிலத்தகராறு உள்ளது. அய்யனாருக்கு ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலத்தில் கழிப்பறை கட்டி உபயோகப்படுத்தி வந்தார். அவர்களிடையே ஏற்பட்ட தகராறில், 'கழிப்பறையை இடித்துவிடுவோம்' என, அய்யனாரிடம் அவரது பங்காளிகள் கூறினர்.
இதனால் அய்யனார், நேற்று முன்தினம் பூலாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இருதரப்பினரையும் நேற்று விசாரணைக்கு போலீசார் அழைத்தனர். அய்யனார், அவரது மனைவி பழனியம்மாள், ஸ்டேஷனுக்கு வந்தனர். அப்போது அவரது பங்காளியான ஆறுமுகம் உள்பட, 5 பேர், பொக்லைன் மூலம் கழிப்பறையை இடித்தனர். இதை அறிந்த அய்யனார், 'போலீசாரின் மெத்தனப்போக்கால் கழிப்பறை கட்டடம் இடிக்கப்பட்டுள்ளது' என கூறினார். தொடர்ந்து ஸ்டேஷன் முன் அவரும், பழனியம்மாளும், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். போலீசார் உடனே தடுத்து, தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். பின் இது
குறித்து அய்யனார் புகார்படி, கழிப்பறையை இடித்த ஆறுமுகம், 45, மீது வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.
மேலும்
-
'என்னை இங்கேயே சுட்டுத்தள்ளுங்கள்': ஷேக் ஹசீனாவின் 'திக் திக்' நிமிடங்கள்
-
நிர்வாகிகளிடம் சத்தியம் வாங்கிய ராமதாஸ்; சமூக ஊடக பேரவை கூட்டத்தில் பரபரப்பு
-
இருட்டு பய பதற்றம் போல உதயநிதி பேசுகிறார்: பா.ஜ.,
-
த.வெ.க.,வினர் மீது தாக்குதல் எதேச்சதிகாரத்தின் உச்சம்: சீமான்
-
எதிர்க்கட்சிகள் ஓரணியில் செயல்படவில்லை: அ.தி.மு.க.,வை உஷார்படுத்தும் திருமா
-
ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,