ஊக்கத்தொகை வழங்குவதில் துரோகம்: பா.ம.க.,

சென்னை:
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
கடந்த 2024 - -25ல் சாதாரண வகை நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, 100 கிலோ எடையுள்ள குவின்டாலுக்கு 2,369 ரூபாயாகவும், சன்னரக நெல்லுக்கான ஆதரவு விலையை, 2,389 ரூபாயாகவும், மத்திய அரசு உயர்த்தி உள்ளது. கடந்த ஆண்டைவிட, குவின்டாலுக்கு வெறும் 69 ரூபாய், அதாவது 3 சதவீதம் மட்டும் உயர்த்துவது போதுமானது அல்ல.
நெல்லுக்கு கொள்முதல் விலை நிர்ணயிக்கும்போது, விவசாயிகளின் நலனை, மத்திய அரசு கருத்தில் கொள்வதில்லை. கொள்முதலுக்கான ஊக்கத்தொகை வழங்குவதில், தமிழக அரசும் துரோகம் செய்கிறது. கடந்த ஆண்டில், ஒரு குவின்டால் நெல்லுக்கு, சாதாரண வகைக்கு 105 ரூபாய், சன்ன ரகத்துக்கு 120 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.
ஒடிஷாவில் குவின்டாலுக்கு 800 ரூபாய், தெலுங்கானாவில் குவின்டாலுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதுபோல் தமிழக அரசும் குவின்டாலுக்கு 1,000 ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
மத்திய அரசிடம் பேசி, ஒரு குவின்டாலுக்கு 3,500 ரூபாய் வீதம், கொள்முதல் விலை வழங்கப்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ரெய்டுக்கு வந்த அதிகாரிகள்... ஜன்னல் வழியே பணக்கட்டுகளை தூக்கி வீசிய அரசு இன்ஜினியர்
-
பா.ம.க. உட்கட்சி பிரச்னைக்கும் பா.ஜ.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நயினார் நாகேந்திரன்
-
நிர்வாகிகளை நீக்கும் ராமதாஸ்... சேர்க்கும் அன்புமணி; பா.ம.க.வில் வெடித்து கிளம்பிய பூசல்
-
நிமிடங்களில் பாக், விமானப்படை தளங்கள் அழித்ததே இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்தது வானிலை மையம்!
-
வழக்குகளை விரைவில் முடிக்க போலி குற்றவாளிகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கண்டனம்