மழை தீவிரம் குறைவால் மின் தேவை அதிகரிப்பு
தமிழக அனல், புனல், காற்றாலை, மத்திய மின் தொகுப்பு மூலம் மொத்தம், 18,038 மெகாவாட் மின்சாரம் வினியோகம் செய்யலாம். ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலை அருகே உள்ள பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது.
அதற்கேற்ப விவசாய, வீட்டு மின்தேவை குறைந்ததால் கடந்த, 25ல், தமிழக மின் தேவை, 13,509 மெகாவாட் ஆக சரிந்தது. பின் மாநிலம் முழுதும் பரவலாக கோடை மழை தீவிரம் குறைந்தது. அதற்கேற்ப மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்தது. 26ல், 15,410 மெகாவாட் ஆக இருந்த மின்தேவை நேற்று முன்தினம், 16,466 மெகாவாட் ஆக அதிகரித்தது. காற்றாலைகள் மூலம் அதிகபட்சம், 9,331 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். காற்றின் வேகம் அதிகரித்ததால், கடந்த, 25ல், 3,536 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, 26ல், 4,051 மெகாவாட், நேற்று முன்தினம், 4,770 மெகாவாட் ஆக அதிகரித்தது.
நமது நிருபர்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உக்ரைனில் போர் நிறுத்தம்: ஐ.நா.,வில் புடினுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
-
டிரம்ப்பின் இறக்குமதி வரி விவகாரம்; தற்காலிக அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்
-
10, 12ம் வகுப்பு மாணவர்களை இன்று கவுரவிக்கிறார் விஜய்; விருது வழங்கும் விழாவுக்கு தடபுடல் ஏற்பாடு
-
திருப்பூரில் ரூ.7 லட்சம் கோடி பண பரிவர்த்தனை; கடந்த நிதியாண்டை விட 35.77 சதவீதம் அதிகம்
-
திருச்சி கோவில்களில் கவர்னர் சுவாமி தரிசனம்
-
'ஒன் டே ரெஸ்ட், நெக்ஸ்ட் டே' கட்சி பணி; வாரிசுகளுக்கு தலைவர்கள் அறிவுறுத்தல்
Advertisement
Advertisement