இதையும் கவனிங்க சார்: சிறு மழை பெய்தாலே தொடரும் மின் தடை: இரவில் கொசுக்கடியால் தவிக்கும் குழந்தைகள்

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை சீசனில் மழைப்பொழிவு இருக்காது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியாக இருப்பதால் அவ்வப்போது சாரல் மழை கிடைக்கும். ஜூன் 1ல் துவங்க வேண்டிய பருவமழை ஒரு வாரத்துக்கு முன்பாக மே 24ல் துவங்கி விட்டது.

பல இடங்களில் அவ்வப்போது சிறிதளவு மழை பெய்து வருகிறது. இந்த சிறுமழைக்கு அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. மின்தடையின் போது திருட்டும் நடந்து வருகிறது. கிராமப்புறங்களில் உள்ளாட்சி அமைப்பு பதவிகள் காலியாகிவிட்டதால் துப்புரவு பணியில் சரிவர நடக்கவில்லை.

இதனால் மின்தடையின் போது கொசு தொல்லையும் சேர்ந்து மக்களை வாட்டுகிறது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement