தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ; முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 4 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், உயர்கல்வித்துறை சார்பில் இக்கல்வியாண்டில் மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.
ஏற்கனவே, உயர்கல்வித்துறை சார்பில் 2025-26ம் கல்வியாண்டு முதல் செயல்படும் கடலூர் மாவட்டம் பண்ருட்டு, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மட்டும் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.





மேலும்
-
நான் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று சொன்னவர் நடிகர் ராஜேஷ்: ரஜினிகாந்த் புகழாரம்
-
2026 சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளுக்கு தயாரான தேர்தல் ஆணையம்: வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
-
அதிகாலை வாகன பயணத்தில் சோகம்: கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலி
-
நெல்லை பல்கலை. வினாத்தாள் கசிய விட்டது யார்; 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து தேடுகிறது போலீஸ்!
-
மக்களே, உஷாராக இருங்க; கொரோனா தொற்று பாதிப்பு 2,700ஐ தாண்டியது!
-
சமூகநீதியை படுகொலை செய்யும் திராவிட மாடல் அரசு; அன்புமணி ஆவேசம்