'கொடை' யில் சூறைக்காற்றால் சாய்ந்த வாழைகள்

கொடைக்கானல்,: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சாரல் மழையுடன் வீசிய சூறைக் காற்றில் ஏராளமான மலைவாழைகள் சேதமடைந்து விவசாயிகள் பாதித்தனர்.
கொடைக்கானல் மன்னவனுார், கும்பூர், கீழானவயல் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்களாக பலத்த சூறைக்காற்று வீசியது.
ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட மலைவாழைகள் சாய்ந்தன. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதித்தது.
மேலும் அவகடா, ஆரஞ்சு உள்ளிட்ட மலைப் பயிர்களும் சேதமடைந்தன. காற்றிற்கு சாய்ந்த மலைவாழைகளை தோட்டக்கலைத்துறையினர் ஆய்வுசெய்தனர்.
வழக்கத்திற்கு மாறாக வீசிய காற்றால் வாழைகள் சேதம் அடைந்தால் விவசாயிகள் செய்வதறியாது தவித்தனர்.
பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?
-
ரூ.639 கோடியில் 40 மாடி 2 சொகுசு பங்களாக்கள்; விலைக்கு வாங்கி அதிர வைத்த இந்திய பெண் தொழிலதிபர்
-
தமிழகத்தில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் ; முதல்வர் அறிவிப்பு
-
உக்ரைனில் போர் நிறுத்தம்: ஐ.நா.,வில் புடினுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
-
டிரம்ப்பின் இறக்குமதி வரி விவகாரம்; தற்காலிக அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்
Advertisement
Advertisement