'ஆச்சார்யா பஞ்சகச்சம்' வேட்டியை பிரபலப்படுத்தும் 'ராம்ராஜ் காட்டன்'


சேலம், மே 29
ராம்ராஜ் காட்டன் நிறுவனம், கலாசார வல்லுனருமான துஷ்யந்த் ஸ்ரீதருடன் இணைந்து, 'ஆச்சார்யா பஞ்சகச்சம்' வேட்டியை பிரபலப்
படுத்த திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, ராம்ராஜ் காட்டன் நிறுவனரும், கலாசார தொழில்முனைவோருமான நாகராஜன் கூறுகையில், ''ராம்ராஜ் என்றாலே காட்டன் வேட்டிகள் தான் நினைவுக்கு வரும். நாங்கள், 4,000 வகையான வேட்டிகளை தயாரித்து நாடெங்கும் விற்பனை செய்து வருகிறோம். இதில், 'பஞ்சகச்சம்' வேட்டி, ஆச்சார்யர்களுக்கும், குருமார்களுக்கும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டதாகும். தென்னிந்தியாவை தாண்டி, உலகமெங்கும் இதை எடுத்துச்செல்ல வேண்டும் என, நினைத்தபோது, இயல்பாகவே எங்களின் தேர்வாக, 'துஷ்யந்த் ஸ்ரீதர்' அமைந்துவிட்டார். இந்திய கலாசாரத்தை உலகெங்கும் கொண்டு
சென்று சேர்க்கும் அவரது அர்ப்பணிப்பு உணர்வின் காரணமாகவே, 'ஆச்சார்யா பஞ்சகச்சம்' வேட்டியின் விளம்பர துாதராக, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்,'' என்றார்.
தொடர்ந்து, துஷ்யந்த் ஸ்ரீதர் கூறுகையில், ''ஆச்சார்யா வேட்டிகள் மூலம், ராம்ராஜ் காட்டன் நிறுவனம், ஆன்மிக மரபுக்கு மரியாதை செலுத்துவது பெருமைக்குரிய விஷயம். நம் கலாசாரத்தை போற்றி வளர்க்க வேண்டும் என்பதுடன், இன்றைய இளம் தலைமுறை, நம் பாரம்பரிய உடைகளை அணிந்து, நம் முன்னோர்கள் வாழ்ந்து காட்டிய நெறிகளை பின்பற்ற வேண்டும்,'' என்றார்.

Advertisement