அம்மன் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு; பக்தர்கள் மறியல்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே அம்மன் ரத ஊர்வலத்தில் மேள தாளம், வானவேடிக்கை நடத்த கிறிஸ்தவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பக்தர்கள் மறியலில் ஈடுபட்டனர்.திண்டுக்கல்லை அடுத்த வக்கம்பட்டியில் காளியம்மன், பகவதி அம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு அம்மன் ரத ஊர்வலம் மேளதாளம் முழங்க வானவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அமலோற்பவ மாதா சர்ச் முன்பாக வந்த போது சிலர் சர்ச் பகுதியில் மேளம் அடிக்க, வாணவேடிக்கை நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சிவசேனா மாநில தலைவர் பாலாஜி, மாநில பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பக்தர்கள் திண்டுக்கல் - வத்தலக்குண்டு ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ்.பி., மகேஷ், தாசில்தார் முத்துமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
மேலும்
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?