சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு

1

சென்னை: சென்னை, செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.



இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;


சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் காட்டாங்கொளத்தூர் பணிமனையில் ஜூன் 1 காலை 11.45 முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.


எனவே, ஜூன் 1 காலை 11, 11.45 மணி மற்றும் நண்பகல் 12.30 மற்றும் 1.45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடைய பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்.


சென்னை கடற்கரையில் இதே தேதியில்(ஜூன்1) நண்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.


செங்கல்பட்டில் இருந்து இதே தேதியில் (ஜூன் 1) மதியம் 12, 1 மற்றும் 1.50, பின்னர் மாலை 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்.


செங்கல்பட்டில் இருந்து இதே தேதியில் மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.


இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement