கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

தேனி:தாடிச்சேரி முதல் கொடுவிலார்பட்டி வரை உள்ள நீர்வரத்து கால்வாய் சீரமைப்புப் பணிகளை பருவமழை தீவிரமடைவதற்குள் முடிக்க மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ் அறிவுறுத்தினார்.

உத்தமபாளையம் நீர்வளத்துறை பெரியாறு -வைகை வடிநிலப் பிரிவின் கீழ் தாடிச்சேரி கண்மாய் உள்ளது.

இந்த கண்மாயில் இருந்து கொடுவிலார்பட்டி கண்மாய் வரை உள்ள 4.2 கி.மீ., துாரம் நீர்வரத்துப் பாதை சீரமைப்பு பணி நடந்து வருகின்றன.

மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் கால்வாய் கரைகள் சீரமைக்கப்பட்டன. இப்பணி 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளன.

நேற்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோவிந்தராவ், பெரியகுளம் ஆர்.டி.ஓ., ரஜத்பீடன், பெரியாறு - வைகை வடிநிலப் பிரிவின் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலையில், கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

Advertisement