உச்சநீதிமன்றத்திற்கு மூன்று புதிய நீதிபதிகள் நியமனம்; கொலீஜியம் பரிந்துரை ஏற்பு

புதுடில்லி: கொலீஜியம் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அன்ஜாரியா, பிஸ்னோய்,சந்துர்கர் ஆகிய 3 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.
அண்மையில் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் திரிவேதி ஆகியோர் ஓய்வு பெற்றனர். இதனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மூன்று காலியிடங்கள் உருவாகின. தற்போது 31 நீதிபதிகள் கொண்டு உச்ச நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இதனால் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலீஜியம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அன்ஜாரியா, பிஸ்னோய்,சந்துர்கர் ஆகிய மூவரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பரிந்துரை செய்தது.
இந்நிலையில், கொலீஜியம் பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக அன்ஜாரியா, பிஸ்னோய்,சந்துர்கர் ஆகிய 3 பேரை நியமனம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். இனி உச்ச நீதிமன்றம், அதன் முழு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதிகள் எண்ணிக்கையுடன் செயல்படும்.
