கணக்கெடுப்பு பணி செய்ய தன்னார்வலர்களுக்கு பயிற்சி

தேனி: தாயுமானவர் அன்புக்கரங்கள் திட்ட கணக்கெடுப்பு பணி பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் 83 தன்னார்வலர்களுக்கு பெருந்திட்ட வளாகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. மாவட்ட அலுவலர் சந்தியா தலைமை வகித்தார். பயிற்சி பற்றி அலுவலர்கள் கூறுகையில், மாநில அரசு சார்பில் தாயுமானவர் அன்புக்கரம் திட்டத்திற்காக சர்வே பணிகள் துவங்க உள்ளது.

இந்த திட்டத்தில் பெற்றோர்கள் இருவரையும் இழந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட உள்ளனர். தன்னார்வலர்கள் வீடுகள், பள்ளிகளுக்கு சென்று இந்த கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ளனர்.

கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள செயலி வழங்கப்பட்டுள்ளது. செயலி பயன்படுத்துவது பற்றிய பயிற்சி வழங்கி உள்ளோம். கணக்கெடுக்கப்படும் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்றனர். பயிற்சி வகுப்பை அலுவலர் முனியசாமி ஒருங்கிணைத்தார்.

Advertisement