குறிஞ்சிப்பாடி பகுதியில் கலெக்டர் ஆய்வு

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி ஒன்றிய பகுதிகளில் கலெக்டர் கள ஆய்வு மேற்கொண்டார்

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று கள ஆய்வு செய்தார். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் குள்ளஞ்சாவடி வழுதலம்பட்டு பகுதியில் ஆய்வு செய்த அவர், நெடுஞ்சாலைத்துறை மூலம் குள்ளஞ்சாவடி பிரதான சாலை மற்றும், குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதி பகுதிகளில் நடக்கும் பேவர் பிளாக் சாலை பணிகளையும் பார்வையிட்டார்.

இதையடுத்து பரவணாறு படுகையில் பாசன வாய்க்கால் தூர்வாரப்பட்டது, பெருமாள் ஏரிக்கரை சாலை சீரமைப்பு, த.பாளையம் பழத்தோட்டம், தம்பிப்பேட்டை கால்நடை முகாம் தொடக்கம், குறிஞ்சிப்பாடி முதல்வர் மருந்தகம், அரசு மருத்துவமனை, அரசுப்பள்ளி ஆய்வு, வட்டாட்சியர் அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாம் உள்ளிட்டவற்றில் அவர் கலந்து கொண்டார்.

இதே போல வடலூர் நகராட்சி சுற்றுப்பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

Advertisement