பேத்தி மாயம் தாத்தா புகார்

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே காணாமல் போன பேத்தியை கண்டுபிடித்து தரக்கோரி, தாத்தா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திமுருகன் மகள் அனிஷா, 16. கடந்த 26ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது தாத்தா சேட்டு கொடுத்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement