மந்தாரக்குப்பத்தில் நவீன வசதிகளுடன் விளையாட்டு பூங்கா அமைக்கப்படுமா?

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் பகுதியில் நவீன வசதிகளுடன் சிறுவர் விளையாட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மந்தாரக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசதித்து வருகின்றனர். இங்கு என்.எல்.சி., இரண்டாம் சுரங்கம், நிர்வாக அலுவலகம், மருத்துவமனை, பள்ளிகள், மார்க்கெட், வங்கிகள் உள்ளிட்டவைகள் அமைந்துள்ளது. மேலும் இப்பகுதியில் என்.எல்.சி. க்கு சொந்தமான இடம் மற்றும் கெங்கைகொண்டான் பேரூராட்சி, மற்றும் பழையநெய்வேலி, வடக்குவெள்ளுர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஏராளமனோர் வசித்து வருகின்றனர்.

கெங்கைகொண்டான் பேரூராட்சி கே.வி.ஆர். நகர் பகுதியில் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து, பராமரிப்பு இல்லாததால் சிறுவர்கள் கோடை விடுமுறையில் விளையாட முடியமால் நிலை உள்ளது. மேலும் இப்பகுதியில் என்.எல்.சி., தொழிலாளர்கள், ஒய்வு பெற்ற என்.எல்.சி., தொழிலாளர்கள், முதியவர்கள், மாணவர்கள், சிறுவர்களுக்கு பொழுது போக்கு இடம் மற்றும் நடைபயிற்சி இடம் இல்லாததால் கடும் சிரமம் அடைகின்றனர்.

மந்தாரக்குப்பம் அருகில் உள்ள நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் பல இடங்களில் நடை பாதை வசதியுடன் நவீன சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மந்தாரக்குப்பம் பகுதியில் நவீன விளையாட்டு பூங்கா அமைக்க என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement