நடராஜர் கோவிலில் செங்கோல் தினம்  

சிதம்பரம்: பார்லிமென்ட்டில் செங்கோல் நிறுவப்பட்ட தினத்தையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்திய பார்லிமென்ட்டில் , செங்கோல் நிறுவனப்பட்ட தினமான நேற்று, சிதம்பரம் நடராஜர் கோவிலில் செங்கோல் தினம் கடைபிடிக்கப்பட்டது. அதனையாட்டி, நேற்று சிதம்பரம் நடராஜர் கோவிலில், செங்கோலுக்கு பட்டு வஸ்திரம், மாலை அணிவிக்கப்பட்டு, கோளறு பதிகம் பாடி தர்மம் நிலைக்க வேண்டும் என கோவில் பொது தீட்சிதர்கள் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் கோயில் கமிட்டி செயலர் சிவசுந்தர தீட்சிதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் பங்கேற்றனர். பொதுமக்களுககு இனிப்பு வழங்கப்பட்டது.

Advertisement