தமிழக பீச் கபடி அணிக்கு கடலுார் மாணவி தேர்வு

கடலுார்: மசூலிப்பட்டினத்தில் நடக்க உள்ள 12வது தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழக அணிக்கு கடலுார் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
12வது பீச் தேசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி மசூலிப்பட்டினத்தில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க உள்ள தமிழக அணியில் கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி சபிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடலுார் அடுத்த ஒதியடிக்குப்பத்தைச் சேர்ந்த மாணவி சபிதா, தற்போது காஞ்சிபுரம் சங்கரா பல்கலைகழகத்தில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படிக்கிறார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் காஞ்சிபுரம் எக்ஸலன்ஸில், பயிற்சியாளர் நதியாவின் மேற்பார்வையில் பயிற்சி பெறுகிறார். இவர் அண்மையில் பீகாரில் நடந்த கேலோ இந்தியா இளையோர் போட்டியில் தமிழக கபடி அணியில் இடம்பிடித்து வெண்கல பதக்கம் வென்றவர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சென்னை-செங்கல்பட்டு மின்ரயில்கள் தற்காலிகமாக ரத்து; தெற்கு ரயில்வே அறிவிப்பு
-
தங்க நகைக்கடன் கட்டுப்பாடுகளை தளர்த்தும் மத்திய அரசு: ஆர்பிஐக்கு புதிய பரிந்துரை
-
பஞ்சாபில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து: 5 பேர் பலி; 34 பேர் காயம்
-
தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்வு; ஒரு சவரன் ரூ.71,360க்கு விற்பனை
-
பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தான்: கொலம்பியாவில் சசிதரூர் கடும் தாக்கு
-
காலை எழுந்தவுடன் காபி நல்லதா? கெட்டதா?
Advertisement
Advertisement