மகளிர் குழு கட்டடம் சேதம் மின்னல் சித்தாமூரில் சிரமம்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், மின்னல் சித்தாமூர் ஊராட்சியில், ஒருங்கிணைந்த மகளிர் சுய உதவிக்குழு கட்டடம் உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த கட்டடம் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இதனால், இப்பகுதியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியவில்லை.
மகளிர் குழு தொடர்பான பணிகளை மேற்கொள்ள, வேறு இடமும் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்த பலமுறை ஊராட்சி மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் இந்த பழுதடைந்த கட்டடத்தை ஆய்வு செய்து, அந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்தி, புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாடு முழுவதும் மின்னணு போர்க்கருவிகள் சோதனை: ராணுவம்
-
புலி மனிதர் என அழைக்கப்படும் வால்மீக் தாப்பர் காலமானார்
-
அனைத்து துறைகளிலும் பாக்.,கை முந்திய இந்தியா: முப்படை தளபதி
-
முதல்வர் ஸ்டாலினின் ரோடு ஷோ: மதுரையில் துவக்கம்
-
தமிழகத்தில் இயல்பை விட 97 சதவீதம் அதிகமாக மழைப்பொழிவு
-
தெலுங்கானாவில் மாவோயிஸ்டுகள் 8 பேர் போலீசில் சரண்
Advertisement
Advertisement